ஈரானின் புதிய தலைவரின் முதல் அதிரடி: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் (Mojtaba Khamenei) தலைமையின் கீழ் இஸ்ரேல் மீது முதற்கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது.
இதனை அந்நாட்டு அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஈரானின் அரச ஊடகமான IRIB தனது டெலிகிராம் சேனல் வாயிலாக இந்தத் தாக்குதல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
போர் பதற்றம்
இதனடிப்படையில், முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி பதவியேற்றதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்தப்படும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
குறித்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ஒன்றில் “உங்கள் சேவையில், செய்யித் மொஜ்தபா (At Your Service, Sayyid Mojtaba)” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட புகைப்படத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.

ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன் இஸ்ரேல் இதற்கு எந்நேரமும் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் புதிய தலைமை தனது அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் இஸ்ரேல் மீதான இந்தத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச தரப்பில் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |