ஈரான் - ஓமான் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும் கப்பல்கள் ஈரான் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்து ஓமானுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்படும் என்றும் ஈரானிய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், வணிகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஈரான் மற்றும் ஓமான் இடையே மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஓமானின் மூலம் மறைமுகமாக ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டாலும், அந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா நேரடி பங்கேற்பை ஈரான் நிராகரித்துள்ளதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
கடற்படை முற்றுகை
மேலும், இந்த ஒப்பந்தம் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என்பதைக் குறிக்கவில்லை என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் வரை அதை ஈரான் போர் நடவடிக்கையாகவே கருதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்த பின்னரே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பது ஈரானின் நிலைப்பாடு எனவும் விளக்கப்படுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை, கட்டார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை மத்தியஸ்தர்களாக பயன்படுத்தி, ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் அந்த அழைப்பை ஏற்க வேண்டுமா என்பது குறித்து ஈரான் இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |