தற்காலிக போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்
எந்தவொரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் ஈரான் நிராகரிப்பதாகவும், பிராந்தியம் முழுவதும் போருக்கு ஒரு முழுமையான முடிவைக் காண விரும்புவதாகவும் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்தால்யா ராஜதந்திர மன்றத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கதிப்சாதே, எந்தவொரு போர் நிறுத்தமும் "லெபனான் முதல் செங்கடல் வரையிலான" அனைத்து மோதல் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், அதனை ஈரானுக்கான "சிவப்புக் கோடு" என்றும் விவரித்துள்ளார்.
இதன்படி "தாங்கள் எந்தவொரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் ஏற்கப் போவதில்லை," என்று கூறிய அவர், "இந்த மோதல் சுழற்சி இங்கேயே முற்றிலுமாக முடிவுக்கு வர வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
இதன்படி ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய அவர், அது ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பிற்குள் அமைந்திருந்தாலும் நீண்ட காலமாக அணுகக்கூடியதாக இருந்து, மேலும், வரலாற்று ரீதியாகத் இது திறந்தே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகவும், அவற்றின் நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தையும் பரந்த பொருளாதாரத்தையும் எதிர்மறையாகப் பாதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |