தங்கத்தின் விலையை வீழ்ச்சியடையச் செய்த ஈரான் போர்
ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் பெப்ரவரி 28 அன்று தொடங்கிய பின்னர், உலகளாவிய தங்க விலை எதிர்பாராத விதத்தில் கடுமையாக சரிந்துள்ளது.
போர் பதற்றம் அதிகரித்தபோது தங்கம் சற்று உயர்ந்தாலும், பின்னர் சுமார் 15-20% வரை வீழ்ச்சியடைந்து.
ஒரு அவுன்ஸ் 5,400 டொலருக்கு மேல் இருந்த விலை வரம்பானது இன்று 4,100-4,500 டொலர் வரை குறைந்துள்ளது.
இலங்கையின் தங்க விலை
இந்தியாவில் ரூபாய் அடிப்படையில் சுமார் 17% சரிவு ஏற்பட்டு, 10 கிராம் தங்கத்துக்கு ரூ.29,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது இலங்கையின் தங்க விலையிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவால் உலகளாவிய தங்க சந்தையின் மதிப்பு 7-9 டிரில்லியன் டொலர் அளவுக்கு குறைந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக போர் அல்லது புவிசார் பதற்றம் ஏற்படும்போது தங்கம் பாதுகாப்பான சொத்து (safe-haven) என்பதால் விலை உயரும்.
ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. மாறாக, போரின் பொருளாதார விளைவுகள் தங்கத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளன.
அமெரிக்க டொலர் வலுவடைதல்
தங்கம் டொலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், Dollar Index உயர்ந்தால் தங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விலை உயர்ந்ததாகத் தெரிகிறது.

போர் காரணமாக முதலீட்டாளர்கள் அமெரிக்க டொலர் மற்றும் திறைசேரி பத்திரங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
இதன்படி அமெரிக்கா எண்ணெய் சுயசார்பு நாடு என்பதால், எண்ணெய் விலை உயர்வு அதை ஒப்பீட்டளவில் குறைவாக பாதித்து, டொலரை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எண்ணெய் விலை உயர்வு பணவீக்க அச்சம்
குறிப்பாக ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை $100க்கு மேல் உயர்ந்தது (பின்னர் சற்று குறைந்தது). இது உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் (rate cuts) எதிர்பார்ப்பு குறைந்து, மாறாக வட்டி விகிதம் உயரும் அல்லது நீண்ட காலம் உயர்ந்த நிலையில் இருக்கும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர்.
இதன்படி தங்கம் வட்டி ஈட்டாத சொத்து என்பதால், வட்டி விகிதம் உயர்ந்தால் அதன் ஈர்ப்பு குறைகிறது. முதலீட்டாளர்கள் பணத்தை டொலர் அல்லது பத்திரங்களில் வைக்க விரும்புகின்றனர்.
லிக்விடிட்டி தேவைக்காக தங்கத்தை விற்றல்
பங்குச் சந்தைகள் சரிந்தபோது, லெவரேஜ் செய்த ஸ்பெகுலேட்டர்கள் margin calls(வாங்கிய பங்குகளின் மதிப்பு கணிசமாகக் குறையும்போது, கணக்கில் உள்ள பணத்தை அதிகரிக்க (கூடுதல் பணம் அல்லது பங்குகளாக Broker விடுக்கும் எச்சரிக்கை அழைப்பு) தங்கத்தை உடனடியாக விற்றதாக சர்வதேச ஆய்வுகள் விளக்கியுள்ளன.
ஏற்கனவே 2025-இல் தங்கம் பெரிய உயர்வை (5,500டொலர்) கண்டிருந்ததால், profit-booking மற்றும் heavy liquidation ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிற காரணங்கள் - நிபுணர்களின் கருத்து
மேலும் சர்வதேச எண்ணெய் விலை உயர்வு safe-haven flow-ஐ எண்ணெய் சார்ந்த சொத்துகளுக்கு திருப்பியது. சில நாட்களில் ceasefire பேச்சுகள் மற்றும், அமெரிக்க தரப்பின் கருத்துக்கள் வந்தபோது விலை ஓரளவு ஸ்திரப்படுத்தியது.
பல பொருளாதார நிபுணர்கள் இதை “paradox” என்று அழைக்கின்றனர். போர் பதற்றம் geopolitical safe-haven demand உருவாக்கினாலும், அதன் பொருளாதார விளைவுகள் (எண்ணெய் அதிர்ச்சி → பணவீக்கம் → வலுவான டொலர் + உயர் வட்டி விகிதங்கள்)தங்கத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளன.
சந்தை இப்போது பேரியல் காரணிகள் மீது அதிகம் கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் தங்கம் விலை சரிவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நிபுணர்களின் கருத்து வெளியாகியுள்ளது.
இதன்படி இந்திய மதிப்பில் ரூ.17,000 வரை ஒரு பவுன் குறைந்த நாட்களும் உள்ளன. போர் நீண்டால் அல்லது Hormuz நீரிணை போன்ற இடங்களில் தொடர் இடையூறு ஏற்பட்டால் விலை மீண்டும் மாறலாம். எனினும் பதற்றத் தணிப்பு ஏற்பட்டால் பேரியல் காரணிகள் மீதான அழுத்தம் குறையும் என நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |