அமெரிக்க -இஸ்ரேலிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது ஈரான் இராணுவம்
இஸ்பஹானுக்கு மேலே பறந்த MQ-9 ஆளில்லா விமானம் மற்றும் கெஷ்ம் தீவுக்கு மேலே பறந்த LUCAS ஆளில்லா விமானம் உட்பட இரண்டு ஆளில்லா விமானங்களை தனது வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை, மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹானுக்கு மேலே பறந்த அமெரிக்க-இஸ்ரேலிய MQ-9 ஆளில்லா விமானம் ஒன்று, இராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ஈரானிய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அழிப்பு
அத்துடன் இன்று காலை 10:30 மணிக்கு, கெஷ்ம் பகுதிக்கு மேலே பறந்த அமெரிக்க-இஸ்ரேலிய LUCAS ஆளில்லா விமானம் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இராணுவம் ஒரு தனி அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

இந்த இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து ஈரானின் ஒருங்கிணைந்த கூட்டு வான் பாதுகாப்பு வலையமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி ட்ரோன்களின் மொத்த எண்ணிக்கை 147-ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்