அமெரிக்க தாக்குதல் எதிரொலி : ரஷ்யா பறக்கிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஈரானின்(iran) அணு நிலையங்கள் மீது அமெரிக்கா (us)தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய(russia) ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் நாளை (23)திங்கட்கிழமை ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை, அமெரிக்க இராணுவம் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான், நடான்ஸ் ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணை தாக்குதல்
இதனையடுத்து பதிலடியாக இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது இந்த தாக்குதலில் 86 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, அவசர அவசரமாக ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா செல்கிறார் ஈரான் அமைச்சர்
இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளை ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்தார். இந்தப் போர் பதற்றம் மத்திய கிழக்கு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
