நெருக்கடியைச் சந்திக்கும் போர் நிறுத்தம்! அமெரிக்காவில் தாக்கப்பட்ட ஈரானிய ரேடார் தளங்கள்
ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ஏவப்பட்ட நான்கு ஈரானிய ஒருவழித் தாக்குதல் ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய பின்னர், வெள்ளிக்கிழமை மாலை ஈரானில் உள்ள கடலோரக் கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது .
இதில் குவைத் மற்றும் பஹ்ரைன் வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் இரவோடு இரவாக நடத்திய தொடர் தாக்குதல்களையும் தங்கள் படைகள் இடைமறித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது .
குறித்த தாக்குதலில் எந்த அமெரிக்கப் படையினரும் காயமடையவில்லை என்றும் அது கூறியுள்ளது.
தெஹ்ரான் கூறுவது
எனினும், அமெரிக்க இராணுவத்தின் விரோத நடவடிக்கைகள் என்று விவரித்ததற்குப் பதிலடியாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் ஒரு அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் பிற அமெரிக்க வசதிகளைக் குறிவைத்து நள்ளிரவில் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் அதிகாரப்பூர்வ அரசு ஒளிபரப்பு நிறுவனமானம் தெரிவித்துள்ளது.

தனது ரேடார் தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை, நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்தின் தெளிவான மீறல் என ஈரான் குறிப்பிட்டுள்ளது.
அந்நாட்டின் இராணுவம் விழிப்புடனும், தீர்க்கமாகவும், விகிதாசார அடிப்படையிலும் பதிலடி கொடுத்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் குவைத் வான்வெளிக்குள் ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்து அழித்ததாக குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
பிராந்திய எதிர்வினை
ஈரானிலிருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளையும் பல ஆளில்லா விமானங்களையும் இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறியது.
இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, மேலும் ஒவ்வொரு நாடும் இந்த சமீபத்திய தாக்குதல்களைக் கண்டித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பல நாடுகள் , ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகளைக் குறிவைப்பதைக் கண்டித்ததோடு, இந்தத் தாக்குதல்கள் வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |