இஸ்ரேலை நிலைகுலையச் செய்யும் ஈரானின் IRGC...!
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), இஸ்ரேலிய இராணுவத்திற்குச் சேவையாற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞை பெறும் நிலையங்களை (Satellite reception stations) இலக்கு வைத்துத் தாக்கியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல் ஈரானின் தற்போதைய இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4 (Operation True Promise 4) இன் 79ஆவது கட்டமாக நடத்தப்பட்டுள்ளது.
நீண்ட மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஈரானின் ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள்
இஸ்ரேலிய இராணுவச் செயற்கைக்கோள் நிலையங்கள் மட்டுமின்றி, பிராந்தியத்தில் உள்ள அஸ்ராக் (Al-Azraq), ஷேக் ஈசா (Sheikh Isa), அலி அல் சேலம் (Ali Al Salem) மற்றும் அரிப்ஜன் (Arifjan) ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இஸ்ரேலின் தகவல் தொடர்பு மற்றும் உளவுத்துறை கட்டமைப்பைச் சிதைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் எனப் பார்க்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும், கடந்த மார்ச் 16 அன்று ஈரானின் செயற்கைக்கோள் எதிர்ப்புத் திறன் மையத்தை (Anti-satellite facility) இஸ்ரேல் அழித்ததாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 21 மணி நேரம் முன்