புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா - முன்னாள் போராளி வெளியிட்ட உறுதியான தகவல்
விடுதலைப புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என சிறிலங்கா இராணுவத்துடனான இறுதி கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி அரவிந்தன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
கசப்பான உண்மை

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இந்த நிலையில் வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளியான அரவிந்தன், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் நேரடியாகவே போரில் ஈடுபட்ட இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என தெரிவித்துள்ளார்.
“அண்ணனை பற்றி தற்போது ஒரு அறிவிப்பு வந்திருக்கின்றது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய உண்மை அறிவிப்பு என்று நெடுமாறன் ஐயாவின் கையெழுத்தோடு, ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணன் இருக்கின்றாரா?, இல்லையா? என்று 13 வருடங்கள் பேசிக் கொண்டு, 14வது வருடத்திற்குள் வந்திருக்கின்றோம். அந்த வகையிலே அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பதுதான்”.எனத் தெரிவித்தார்.