அச்சத்தில் உற்று நோக்கும் உலக நாடுகள்: ஈரானில் புதிய தளபதிகளை நியமித்த உச்ச தலைவர்
புதிய இணைப்பு
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் (Iran) இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.
ஒபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், இராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்தத் தாக்குதலில், ஈரானின் முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது பகேரி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படைத் தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நான்காம் இணைப்பு
ஜோர்தான் (Jordan) வான்பரப்பும் மூடப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இடையிலான பதற்ற நிலையையடுத்து ஜோர்தான் தனது வான்பரப்பை மூடியுள்ளது.
இதேவேளை ஈராக்கும் தனது வான்பரப்பை மூடியுள்ளது. முன்னதாக இஸ்ரேலும் ஈரானும் தமது வான்பரப்புகளை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்றாம் இணைப்பு
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளன.
ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால் இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல், ஈரானின் மீது "முன்கூட்டிய தாக்குதல்களை"(Preemptive Strikes) மேற்கொண்டுள்ளதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ அறிவித்துள்ளார்.
இத்தாக்குதல்களுக்கு பின்னர் இஸ்ரேலில் அவசர நிலை(State of Emergency) பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதில்தாக்குதல்
இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு , ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பதில்தாக்குதல் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
𝐓𝐡𝐞 𝐈𝐃𝐅 𝐥𝐚𝐮𝐧𝐜𝐡𝐞𝐝 𝐚 𝐩𝐫𝐞𝐞𝐦𝐩𝐭𝐢𝐯𝐞, 𝐩𝐫𝐞𝐜𝐢𝐬𝐞, 𝐜𝐨𝐦𝐛𝐢𝐧𝐞𝐝 𝐨𝐟𝐟𝐞𝐧𝐬𝐢𝐯𝐞 𝐭𝐨 𝐬𝐭𝐫𝐢𝐤𝐞 𝐈𝐫𝐚𝐧'𝐬 𝐧𝐮𝐜𝐥𝐞𝐚𝐫 𝐩𝐫𝐨𝐠𝐫𝐚𝐦.
— Israel Defense Forces (@IDF) June 13, 2025
Dozens of IAF jets completed the first stage that included strikes on dozens of military targets, including… pic.twitter.com/vtx98P9564
ஈரானின் அரசாங்க ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் தெஹரானில் தொடர்ந்து வெடிப்பு ஒலிகள் கேட்டதாகவும், நிலைமை கவலையை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா எந்தவித உதவியையும் வழங்கவில்லை என்றும், இதில் எந்த நேரடி ஈடுபாடும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம்
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபி, சமூக வலைத்தளமான X-இல் (முன்னாள் Twitter) "எங்களைப் பாதுகாக்க இருவரும் (இஸ்ரேலும் ஈரானும்) வேண்டுகிறேன். எமது தூதரகம் சத்தமின்றி சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்கிறது. எப்போதும் ஜெருசலேமின் நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்று பதிவு செய்துள்ளார்.
At our Embassy in Jerusalem and closely following the situation. We will remain here all night. “Pray for the peace of Jerusalem!” https://t.co/2nAHxijkdA
— Ambassador Mike Huckabee (@GovMikeHuckabee) June 12, 2025
இஸ்ரேலின் ராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல்கள், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் நீண்ட தூர ஏவுகணை திட்டங்களை குறிவைத்தவையாகும்.
இது "முன்கூட்டிய, துல்லியமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை" என்றும், ஈரானில் பல்வேறு பகுதிகளில் உள்ள "டஜன் கணக்கான முக்கிய இடங்கள்" தாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
