ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தவுள்ள பாரிய தாக்குதல்
ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்தியில்,
“எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. எனினும் அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மேலும், அத்தகைய தாக்குதல்கள் அடுத்த வாரத்திற்குள் நிகழக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திசை திருப்பபடும் ஏவுகணை
அமெரிக்க ஜனாதிபதி 48 மணி நேர கெடு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

இது, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மேலதிக இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்குமா என்பது குறித்த கவனத்தை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் அடுத்த கட்டத்தில், அந்நாட்டிடம் உலகளவில் உள்ள ஏறக்குறைய அனைத்து மறைமுகத் தாக்குதல் திறன் கொண்ட JASSM-ER கிரூஸ் ஏவுகணைகளும் பயன்படுத்தப்படவுள்ளதால் , மற்ற பிராந்தியங்களுக்கு முதலில் ஒதுக்கப்பட்டிருந்த ஏவுகணைக் குவியல்களைப் பெருமளவில் திசை திருப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பசிபிக் கட்டளை மையங்களிலிருந்து 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள துல்லிய ஆயுதங்களைத் திரும்பப் பெறுமாறு மார்ச் மாத இறுதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறித்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதலைத் தொடர்வதற்காக, தற்போது அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பு மற்றும் பிற உலகளாவிய தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகள், அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) தளங்களுக்கும், பிரித்தானியாவின் உள்ள ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃ தளத்துக்கும் திருப்பி விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட முக்கிய இராணுவ அமைப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம் 13 மணி நேரம் முன்