காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலி

World Israel-Hamas War Gaza
By Harrish Apr 03, 2025 04:28 PM GMT
Report

மத்திய கிழக்கில் காசா (Gaza) மீதான இஸ்ரேலின் (Israel) தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 50க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காசாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது.

மோடி வருகை - தெருநாய்களை அகற்ற வேண்டாம்!! இந்தியாவில் இருந்து அநுரவுக்கு கடிதம்

மோடி வருகை - தெருநாய்களை அகற்ற வேண்டாம்!! இந்தியாவில் இருந்து அநுரவுக்கு கடிதம்

இஸ்ரேலின் தாக்குதல்

இந்நிலையில், இஸ்ரேல் நேற்று நள்ளிரவில் காசாவில் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பலரும் காயமடைந்துள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலி | Israel Night Attacks Kill 80 People In Gaza

ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காசாவில் புதிய பாதுகாப்பு பகுதிகளை உருவாக்கி, தெற்கு நகரமான ரஃபாவை முழுவதும் பலஸ்தீனத்திடமிருந்து பிரிக்கப் போவதாகவும் இதன்மூலம் மட்டுமே பணயக் கைதிகளை அவர்கள் விடுவிப்பார்கள் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்,“இஸ்ரேல் இராணுவம் காசாவில் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. 

அமெரிக்காவை போல் நாடுகடத்த தீர்மானித்துள்ள மற்றுமொரு நாடு

அமெரிக்காவை போல் நாடுகடத்த தீர்மானித்துள்ள மற்றுமொரு நாடு

காசாவில் போர் நிறுத்தம்

அங்குள்ள முக்கிய பகுதிகளில் இருந்து தீவிரவாதக் கட்டமைப்புகளை அகற்றி அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பின்னா் அவை இஸ்ரேல் பாதுகாப்புப் பகுதிகளாக இணைத்துக்கொள்ளப்படும்.

காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலி | Israel Night Attacks Kill 80 People In Gaza

காசாவில் போர் நிறுத்தம் முறிந்த பின்னர் சண்டை நடைபெற்றுவரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும்.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் இணைந்து உடனடியாக ஹமாஸ் படையினரை அதிகாரத்தில் இருந்து அகற்றி அவா்களால் கடத்திவரப்பட்ட பணயக் கைதிகள் அனைவரையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இது மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025