புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் பிரச்சினை! சட்ட நடவடிக்கை எடுத்தால் ரணில் தோல்வி : உதய கம்மன்பில
சட்ட ஆலோசனை மற்றும் சட்டபூர்வமான முறையிலே புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார (Shantha Bandara) தெரிவித்துள்ளார்.
சட்டம் தொடர்பான நிபுணத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்று அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்க அரசதலைவர் நடவடிக்கை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் பிரச்சினை இருப்பின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர்நீதிமன்றம் செல்ல வாய்ப்பிருப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவாராயின், அது தொடர்பில் நீதிமன்றம் செல்ல முடியும். சட்டபூர்வமான நியமனம் என்ற காரணத்தினாலே அவர் எந்தவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாது உள்ளார்.
அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைக்கூடும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.