வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

Sri Lankan Tamils Mullaitivu ITAK Local government election Sri Lanka 2025
By Sathangani Jun 26, 2025 11:29 AM GMT
Report

புதிய இணைப்பு

வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், இன்று (27) நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவிற்காக தமிழரசுக்கட்சி சார்பில் தி.கிருஸ்ணவேணி பிரேரிக்கப்பட்டதுடன் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஞானமுத்து அகிலன் பிரேரிக்கபட்டார்.

தவிசாளர், உப தவிசாளர் தெரிவு

அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என ஆணையாளரால் கோரப்பட்டது இதன்போது தெரிவுகளை இரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியின் இரு உறுப்பினர்கள் என 8 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி | Itak Seizes Power In Maritimepattu Mullaitivu

சபையில் மீதம் இருந்த 15 உறுப்பினர்கள தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்த நிலையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட கிருஸ்ணவேணிக்கு15வாக்குகள் ஆதரவாக கிடைக்கப்பெற்றது.

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கியமக்கள் சக்தியின்2வாக்குகளும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 4 வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்குமாக15 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

கிருஸ்ணவேணி புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.

உப தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதனின் பெயர் பிரேரிக்கப்பட்டதுடன் வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சஞ்சுதன் போட்டியின்றி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி | Itak Seizes Power In Maritimepattu Mullaitivu

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை

இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் இன்று (27) காலை நடைபெற்றது.

தவிசாளர் தெரிவுக்காக தமிழரசுக் கட்சியின் பாலேந்திரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கார்த்தீபன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

இதன்போது தெரிவுகளை .ரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் இருந்த உறுப்பினர்கள்

சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி | Itak Seizes Power In Maritimepattu Mullaitivu

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப் பெற்ற நிலையில் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக சங்கு கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

துணுக்காய் பிரதேச சபையைக் கைப்பற்றிய தமிழரசுக்கட்சி

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சி உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தெரிவாகியுள்ளார்.

துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசார், உபதவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (26-06-2025) நடைபெற்றது.

13 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் தவிசாளர் தெரிவிற்காக தமிழரசுக்கட்சி சார்பில் கனகரத்தினம் செந்தூரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சிவகுமார். சிந்துஜன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழிக்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழுவின் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலைமை வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு கங்காரு சின்னத்தில் வெற்றி பெற்ற ஒரு உறுப்பினரினதும் ஆதரவுடன் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினம் செந்தூரன் 06 வாக்குகளை பெற்ற நிலையில் சி. சிந்துஜன் 05 வாக்குகளை பெற்றார்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கரைதுறைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றிய தமிழரசுக்கட்சி

முல்லைத்தீவு (Mullaitivu) - கரைதுறைப்பற்று பிரதேச சபை (Maritimepattu PS) தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (26) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அமைப்பதற்காக எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடுதலை : அம்பலமான உண்மை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடுதலை : அம்பலமான உண்மை

தவிசாளர் தெரிவு

தவிசாளர் தெரிவிற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி | Itak Seizes Power In Maritimepattu Mullaitivu

21 உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் 11 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்  04 வாக்குகளையும்,  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 05 வாக்குகளையும் பெற்றிருந்தனர். தமிழரசுக் கட்சி உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா நடுநிமைமை வகித்தார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

செம்மணி போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரனை விரட்டியது தவறு - வெடிக்கும் சர்ச்சை

செம்மணி போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரனை விரட்டியது தவறு - வெடிக்கும் சர்ச்சை

நடைபெற்ற வாக்கெடுப்பு

அத்துடன் உபதவிசாளர் தெரிவிற்காக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன், சுயேட்சை குழு உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி | Itak Seizes Power In Maritimepattu Mullaitivu

இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன் ஒன்பது வாக்குகளையும் சுயேட்சை குழு உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆறு வாக்குகளையும் பெற்றுக்கொள்ள ஆறு உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர்.

இதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025