பெற்ற தாயையே பார்க்காத அர்ச்சுனா..! சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அர்ச்சுனா எம்.பியின் தாயாரை கூட அவர் பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை மத்திய அமைச்சிடம் வழங்குவது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்க முயற்சித்த வேளை அவரை கருத்து தெரிவிக்க விடாமல் அர்ச்சுனா குழப்பினார். இதனால் அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வைத்தியர்களே சாட்சி
இதன்போது இவர் பெற்ற தாயாரையே பார்க்கவில்லை. அதற்கு இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருக்கின்ற வைத்தியர்களே சாட்சி.
மேலும் கோபமடைந்த கஜேந்திரகுமார்,
“நான் கதைக்கும் போது நீ கதைக்காதே. குரங்கை கொண்டு வந்து பக்கத்தில் அமர்த்தி இருக்கிறார்கள்.
இவர் பக்கத்தில் இருப்பதால் எதுவும் கதைக்க முடியாமல் இருக்கிறது என கடுந்தொனியில் சாடியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |