யாழின் சில தீவுகளுக்கான படகு சேவை நேரத்தில் மாற்றம்
யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் இன்று (1) முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்அறிவித்துள்ளது.
ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவைக்கான நேர அட்டவணையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய நேர அட்டவணைக்கு அமைய பேருந்து சேவையினை மேற்கொள்வதற்கான ஒழுங்கமைப்பினை செய்து தருமாறு ஊர்காவற்றுறை பிரதேச செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய நேர அட்டவணை
மாற்றப்பட்ட நேர அட்டவணைக்கமைய அனலைதீவிலிருந்து முற்பகல் 06.00, 07.10, 08.00, 09.00, மதியம் 12.00, பிற்பகல் 02.00, 04.30 ஆகிய நேரங்களில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறை நோக்கி படகு சேவை இடம்பெறும்.

அத்துடன் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையில் இருந்து முற்பகல் 07.00, 09.00, பிற்பகல் 12.15, 02.30, 03.45, 04.45, 05.20 ஆகிய நேரங்களில் அனலைதீவிற்கு சேவையில் ஈடுபடும்.
இதேவேளை எழுவைதீவில் இருந்து முற்பகல் 06.15, 07.20, 09.00, 11.45, பிற்பகல் 02.20, 04.30 ஆகிய நேரங்களில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறை நோக்கி சேவையில் ஈடுபடும்.
இந்த நிலையில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையில் இருந்து முற்பகல் 07.00, 09.00 பிற்பகல் 12.15, 02.30, 03.45, 05.20 ஆகிய நேரங்களில் எழுவைதீவு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |