யாழில் மோட்டார் சைக்கிள் மோதி நபர் ஒருவர் பரிதாபமாக பலி!
யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (25-03-2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனகதாசன் (வயது 62) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 18ஆம் திகதி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார்.
இதன்போது வலதுபக்கம் திரும்புவதற்காக மத்திய கோட்டை நோக்கிச் சென்றவேளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |