யாழிலிருந்து கொழும்பு சென்ற தொடருந்து மோதி குடும்பஸ்தர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (11) கிளிநொச்சி - தொண்டமாநகர் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த கறுப்பையா ஐங்கரன் என்ற 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மது போதையில் இருந்ததன் காரணமாக அவர் தொடருந்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், விபத்து தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி