தெற்கு லெபனான் பதற்றத்திற்கு நடுவே அமெரிக்காவின் நள்ளிரவுப் பேச்சுவார்த்தை!
தெற்கு லெபனானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே இரவு நேரத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஈரான் உடனடியாகச் சுவிட்சர்லாந்திற்குப் புறப்படாமல் தங்களது பயணத்தைத் தாமதப்படுத்தியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நிதி வழிமுறை
இது குறித்து அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance), ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ஈரான் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றத் தொடங்கும் பட்சத்தில் மட்டுமே அவற்றுக்கான நிதி வழிமுறைகளுக்கு அமெரிக்கா உதவும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் உருவாக்க முயன்று வரும் இந்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது என ஜே.டி. வேன்ஸ் மிகவும் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கர்களின் கைகளால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்க வரி செலுத்துவோரின் நிதியுதவியுடன் பெறப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டே இஸ்ரேல் பாதுகாக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த உலகில் தற்போது இஸ்ரேலுக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பர் டொனால்ட் டிரம்ப் மட்டுமாகத்தான் இருக்கக்கூடும் என்றும் எனவே ஈரானுடன் நீண்டகால ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் ட்ரம்பின் நோக்கத்தைக் கெடுக்கும் விதமாக இஸ்ரேல் எதையும் செய்யக் கூடாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |