தொங்கிய அர்ச்சுனாவை கிழித்த அர்ச்சுனா! கிழித்து தொங்கவிடல் நாசம் -வேசம்!
பொதுவாக ஒருவரை கடுமையாக விமர்சிக்கும் போது கிழித்து தொங்கவிடுவது என்ற விளிப்பு இருக்கும் ஆனால் இதற்கு மறுவழமாக தொங்கவிடப்பட்டதை கிழிக்கும் நகர்வும் நடக்கும். ஐயமிருந்தால் இன்று யாழில் தொங்கவிடப்பட்தை அர்ச்சுனா எம்.பி கிழித்த உதாரணத்தை பார்க்கலாம்.
தமிழர் தாயகத்தின் போராட்ட காலத்தில் போராட்டத்தரப்பு கூட தமது எதிராளிகளை அல்லது இரண்டகர்களை காதுகூசும் வார்த்தைகளால் தூசித்ததாக பதிவுகள் இல்லை.
ஆக மிஞ்சினால் டக்ளஸ் போன்றவர்களை அத்தியடி குத்தியன் எனவும் ரணிலை பெரும் நரி எனவும் மதியுரைஞர் பாலசிங்கம் போன்றவர்கள் வேடிக்கையாக எள்ளலாக விளித்துகொள்வார்கள் அவ்வளவுதான்.
ஆனால் உடையன் இல்லா சேலை ஒரு முழம் கட்டை என்பதை போல இப்போதெல்லாம் அடிக்கடி காது கூசும் வார்த்தைகள் எல்லாம் சரளமாக பொதுவெளியில் அதுவும் கௌரவ எம்.பிமாரால் கூறப்படுகிறது.
அதிலும் சுயேச்சை அர்ச்சுனாவின் ...டா ரக, ..யே ரக நாசகார சொல்லாடல்கள்; அவலங்களாகி நிலையில் இன்று காலை யாழ்நகரை அண்டியுள்ள பகுதியில் தொங்கவிடப்பட்ட அருச்சுனாவின் 10 அடி உயர பதாதை ஒன்றுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த காட்சியையும் தொங்கவிடப்பட்ட அந்த பதாதையை அவர் கிழித்து கொண்டுசென்றதையும் காணமுடிந்த நிலையில் ஈழத்தமிழர்களின் வடபுல அரசியல் சமூகப்பபரப்பை நாறடிக்கும் இந்த அவலட்சணங்கள் ஏன் சகித்துக்கொள்ளப்படுகின்றன என்பது ஒரு வினாவாகும்போது இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |