பல்பொருள் அங்காடியில் திருட்டு! பெண் சட்டத்தரணியொருவர் அதிரடி கைது
கொழும்பில் உள்ள வணிக வங்கி ஒன்றின் சட்டப் பிரிவில் பணிபுரியும் 47 வயதுடைய பெண் சட்டத்தரணி ஒருவர், ரத்மலானையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்களைத் திருட முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை தலைமையக காவல்துறையினர் நேற்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் நேற்று (18) பொருட்கள் வாங்குவது போல் நடித்து, ரகசியமாகப் பொருட்களைத் தனது கைப்பையில் மறைத்து வைத்துள்ளார். இது அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவானதை அடுத்து, பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைதொடர்ந்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவர் வளாகத்தை விட்டு வெளியேற முயன்ற போது பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் சோதனை படுத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அதன்போது, அவரது கைப்பையிலிருந்து 520 கிராம் கோழி இறைச்சி, 250 கிராம் மாட்டு இறைச்சி, வறுத்த முந்திரி, ஒரு பல் துலக்கும் தூரிகை (Toothbrush) மற்றும் ல்ன்ச்சீட் பொதி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றின் மொத்த மதிப்பு 5,290 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இதே சட்டத்தரணி நேற்றுமுன்தினமும்(17) இதே முறையில் அந்த பல்பொருள் அங்காடியில் இருந்து மீனைத் திருடிச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியின் அடையாள அட்டையில் பன்னிப்பிட்டிய முகவரி குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவர் ரத்மலானை பகுதியில் வசிப்பவர் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கல்கிசை தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |