ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில், பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (21-02-2026) காலை 9.00 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 15-02-2007 அன்று கலிகைச் சந்தியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இராமச்சந்திரன், அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |