திருமண தடையை உண்டாக்கும் கர்ம தோஷம் - சரி செய்வது எப்படி
Hinduism
By Vanan
மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் இயற்கை. இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சியடையும் மனம் துன்பம் ஏற்படும் போது தடுமாறுகிறது.
இதன் வெளிப்பாட்டின் உச்ச கட்டமாக "கடவுளுக்கு கண் இல்லையா?', "எல்லாம் என் தலைவிதி', "என்ன பாவம் செய்தேனோ?' எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது" எனப் பலவாறு புலம்புவதுண்டு. இது பலருடைய ஆதங்கம்.
தர்மசாஸ்திர நியதிப்படி ஒருவர் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. ஆக கர்ம வினைக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு.
இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனைவருக்கும் பொருந்தும் என்கிறது ஜோதிடம்.