கிழித்தெறியப்பட்ட கருணாவின் முகத்திரை...! வெளிவந்துள்ள அதிர்ச்சிகர உண்மைகள்
கருணா இன்று வரை உயிர் வாழ்வதாலும், தொடர்ச்சியான அவரின் செயற்பாடுகள் காரணமாகவுமே கருணாவைப் பற்றி பேச வேண்டிய, எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் கருணா குறித்த மாயைகள் சிறிலங்கா அரசாலும் தமிழினத் துரோகிகளாலும் சிறிது அதிகமாகவே பரப்பப்பட்டு வருகின்றன.
கருணாவின் இராணுவ ஆற்றல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. கருணாவே முன்பு விடுதலைப்புலிகளின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்ததாகவும், கருணா இல்லாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இனி போர் புரிய முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இதை துரோகக்குழுக்களுக்கு துணை போகின்றவர்கள் நம்பவும் செய்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒரு சிலருக்கு கருணா குறித்த அச்சம் இன்றுவரை இருக்கிறது.
ஆனால் கருணா தான் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு காரணம் என்று நம்புபவர்கள் இராணுவரீதியான அறிவோ, ஆய்வு செய்யும் திறனோ இம்மியளவும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதும், தமிழில் துரோகம் என்ற வார்த்தைக்கு மிகவும் காத்திரமாக திகழும் கருணா விவகாரம் பற்றிய ஆழமான பார்வையை இந்த நிகழ்ச்சி சுமந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
