தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை திருடிய கெஹெலிய
குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(18.08.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மகிழ்ச்சியுடன் பேசும் மகான்கள்
''கெஹெலிய ரம்புக்வெல்ல இப்போது ஒரு வழக்குப் பொருளைப் போல ஆகிவிட்டார்.

இந்த மகான்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள் பாருங்கள். சந்திரக்கல்லைக்கூடதூக்கிச் சென்றிருக்கிறார்கள்.
தொலைக்காட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். இன்றும் வழக்குகள் உள்ளன.
நாமல் யார் என்பதை நாங்கள் அறிவோம். தாஜுதீனை எப்படிக் கொலை செய்தார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
பின்னர் பின்வாசல் வழியாகச் சென்று திருகோணமலையில் மறைந்துகொண்ட விதமும் எங்களுக்கு நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் ராஜபக்சர்களின் பாதுகாவலராக இருந்தவர் ரணில். அதனால்தான் அது ரணில் - ராஜபக்ச அரசாங்கமாக இருந்தது" என கடுமையாக சாடியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |