உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளும் கால் பதிக்கவுள்ள தொல்பொருள் திணைக்களம்- எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள்!
srilanka
kilinochchi
northern
By Vasanth
கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறைப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் குறித்த அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்த இன்று காலை முதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மத தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
