விமானப்படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் : சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிநேசன் (G. Sirinesan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (11) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்தை அண்மித்து கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட காணிகளுக்கு இதுவரையில் ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சிறிநேசன் மேலும் சுட்டிக்காட்டினார்.
பதிலளித்த பிரதி அமைச்சர்
இந்தநிலையில் குறித்த பிரேரணையை வழிமொழிந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (R.Shanakiyan) குறித்த காணிகள் விடுவிக்கப்படுவது கட்டாயமான விடயம் என தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா (Arun Hemachandra), குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி ஆவணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்