இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்! கைதான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Sri Lanka Pakistan India
By Eunice Ruth May 21, 2024 05:34 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in இலங்கை
Report

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு இலங்கையர்கள் (Sri Lanka) தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

குஜராத் (Gujarat) காவல்துறை மா அதிபர் விகாஷ் சாஹே (Vikash Sahay) இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, இதனை தெரிவித்துள்ளார்.  

இந்தியாவின் (India) அஹமதாபாத் (Ahmedabad) சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த விடயம் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கைது நடவடிக்கை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளாக கூறப்படுபவர்கள் நீர்கொழும்பு (Negambo) மற்றும் கொழும்பு (Colombo) பகுதிகளில் வசிப்பவர்கள். 

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்! கைதான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Lankan Isis Terrorists Arrest India Terror Attack

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! வெளியானது வர்த்தமானி

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! வெளியானது வர்த்தமானி

கைது செய்யப்பட்ட 33 வயதான மொஹமட் நுஸ்ரத் (Mohammad Nusrat) என்ற நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான் (Mohammad Nafran), 43 வயதான மொஹமட் ரஷ்டீன் (Mohammad Rashdeen) மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் (Mohammad Farish) ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர்.

விசாரணைகள்

இவர்கள் சென்னை (Chennai) வழியாக அஹமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்! கைதான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Lankan Isis Terrorists Arrest India Terror Attack

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு: இலங்கை எம்.பி வழங்கிய உறுதி!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு: இலங்கை எம்.பி வழங்கிய உறுதி!

தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தும் நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து தொலைபேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமானச் சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் (Pakistan) இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை (Abu) கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், பின்னர் இவர்கள் கடும்போக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தவாதிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தாக்குதல்

மேலும், அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை பணத்தில் 4 லட்சம் ரூபாய் குறித்த தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சை குற்றம் சாட்டும் சி.ஐ.டி! வழங்கப்பட்ட கால அவகாசம்

சுகாதார அமைச்சை குற்றம் சாட்டும் சி.ஐ.டி! வழங்கப்பட்ட கால அவகாசம்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தரப்பினர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு கூட தயாராகி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், அஹமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மூன்று கைத்துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என தெரிவித்துள்ளார். 

யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு!

யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024