இஸ்ரேல் - லெபனானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்!
இஸ்ரேல் (Israel) மற்றும் லெபனானில் (Lebanon) ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற்கொண்டு அங்கு வாழும் இலங்கையர்களின் (Sri Lanka) பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசரநிலை ஏற்பட்டால் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணை தாக்குதல்
கடந்த மாதம் பெய்ரூட்டில் உயர்மட்ட தளபதி புவாட் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக ஹிஸ்புல்லா (Hezbollah) இன்று (25) இஸ்ரேலை (israel) நோக்கி 320க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக இஸ்ரேலில் அடுத்து வரும் 48 மணி நேரங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |