பெருந்தொகை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சிக்கிய லொரி
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற லொரியொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தங்காலை, கொடெல்ல, கடுருபோகுன வீதியில் வைத்து இந்த லொரி கைப்பற்றப்பட்டுள்ளது.
தர்பூசணி பழங்கள் கொண்டு செல்லும் போர்வையில் குறித்த போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதங்கள்
அத்துடன், போதைப்பொருளுக்கு மேலதிகமாக சம்பந்தப்பட்ட லொரியில் இருந்து, ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவால்வர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட லொரியை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்