விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் நீதிமன்றுக்கு சென்ற அறிவிப்பு
வடக்கு கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் வங்கிகளில் இருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளில் ஏழாயிரத்து எழுநூற்று அறுபது தங்க நகைகள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகள் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் தங்க நகைகளிலிருந்தே குறித்த தங்க நகைகள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (29) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
முந்தைய விசாரணையில், பத்தாயிரம் (10,0000) தங்க நகைகளை எடைபோட்டு, அவற்றில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்த விரிவான அறிக்கையை அதன் நீதிமன்றத்திற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நகல்களுடன் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகள் அதிகாரசபையால் பரிசோதிக்கப்பட்ட ஏழாயிரத்து எழுநூற்று அறுபது தங்க நகைகள் மத்திய வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
