அறிக்கையை தாண்டி மறைந்து கிடக்கும் பாரிய சொத்துக்கள்! சர்ச்சைக்குள் மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரி

Mahinda Rajapaksa Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Oct 03, 2025 07:16 AM GMT
Report

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நேற்று (02) காலை வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார்.

புதிய திருப்பங்களுடன் தாஜூதீன் கொலை விசாரணை! நோட்டமிடப்படும் ஷிரந்தியும் - ராஜபக்சரும்

புதிய திருப்பங்களுடன் தாஜூதீன் கொலை விசாரணை! நோட்டமிடப்படும் ஷிரந்தியும் - ராஜபக்சரும்

ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, கையகப்படுத்திய விதத்தை வெளியிட முடியாத ரூ.28 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் உரிமையாளர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அறிக்கையை தாண்டி மறைந்து கிடக்கும் பாரிய சொத்துக்கள்! சர்ச்சைக்குள் மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரி | Mahinda S Security Officer Remanded

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த தலைமை நீதிபதி, சந்தேக நபர் 2014 வரை சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களை சமர்ப்பித்திருந்த போதிலும், அதன் பின்னர் அவற்றை சமர்ப்பிக்கவில்லை என்றும், 2016 முதல் இன்றுவரை கையகப்படுத்தியதை வெளியிட முடியாத ரூ. 28 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமையாளர் என்றும் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான விசாரணை அதிகாரிகள் மற்றும் உதவி இயக்குநர் ஜெனரல் சுலோச்சனா ஹெட்டியாராச்சி, இது தொடர்பாக மேலும் விசாரணைகள் தேவை என்றும், சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது எதிர்கால விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்றும் நீதிமன்றத்திற்கு மேலும் சுட்டிக்காட்டினர்.

இதன்படி சந்தேகநபர் நெவில் வன்னியாராச்சி சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரர் ஐந்து ஆண்டுகளாக சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களை சமர்ப்பிக்காததற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்ற ஒருவர் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளியிடாதது தொடர்பான குற்றச்சாட்டுகளை தங்கள் ஆணையம் விசாரிக்கவில்லை என்றும், அவர் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் உள்ள முரண்பாடுகளையே விசாரிக்கிறது என்றும் கூறியுள்ளது.

தமிழகத்தில் பரபரப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் வீடுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பரபரப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் வீடுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சொத்து மற்றும் பொறுப்பு 

மேலும், அவர் வெளிப்படுத்திய சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானத்தை விட அவருக்கு அதிக வருமானம் மற்றும் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமை இருப்பது இப்போது தெரியவந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, அவருக்கு ரூ.28 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அறிக்கையை தாண்டி மறைந்து கிடக்கும் பாரிய சொத்துக்கள்! சர்ச்சைக்குள் மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரி | Mahinda S Security Officer Remanded

ஆனால் அவர் வசம் அதை விட பெரிய சொத்துக்கள் மற்றும் உடைமைகள் இருப்பது தெரியவருகிறது என்று விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டிருந்த நெவில் வன்னியாராச்சி, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

விசாரணை அதிகாரிகள், சந்தேக நபரிடம், சொத்து எவ்வாறு கையகப்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறிய நடத்தப்படும் விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலங்களை வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சந்தேக நபர் சில நொடிகளுக்குள் தொலைபேசி அழைப்புகளைத் துண்டித்து, அதற்கான திகதியைக் கோரியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், விசாரணை அதிகாரிகள் விசாரணைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இவற்றை பரிசீலித்த நீதவான் விசாரணைகளை விரைவாக முடித்து, சுருக்க அறிக்கைகளை தனது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு இந்த நேரத்தில் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதி மேலதிக விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்ற அடிப்படையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு சுட்டிக்காட்டி இந்த உத்தரவை பிறப்பிதிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026