நட்டஈடு செலுத்த பிச்சை எடுத்த பணத்தை ஏற்றுக்கொண்ட மைத்திரி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்காக யூடியூப் சமூக செயற்பாட்டாளரும் நடிகருமான சுதத்த திலகசிறி வீதியில் செல்லும் மக்களிடம் இருந்து சேகரித்த பணத்தை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார்.
நேற்றைய தினம் (17) கொழும்பு கோட்டையில் நடிகர் பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளார். அவர் வசூலித்த ஒரு நாள் தொகையான1,810 ரூபாயை முன்னாள் அதிபரிடம் கையளித்தார்.
மைத்திரிக்காக பிச்சை எடுத்த நடிகர்
இது குறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த சுதத்தா, மைத்திரிபால சிறிசேன நிரபராதி, பணமில்லாததால் அபராதம் கட்ட முடியாமல் தவிக்கிறார்.
இன்று நான் பெட்டாவுக்கு சென்று தகரத்தை நீட்டி பிச்சை எடுத்தேன். பின்னர் மைத்திரிபாலவிடம் கொடுத்தேன். நான் சேகரித்த பணத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.
நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் இழப்பீடு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தன்னிடம் பணம் இல்லாததால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் இழப்பீடு பெற்று வழங்குவதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 16 மணி நேரம் முன்
