மல்வானை வீடு தொடர்பான வழக்கு விவகாரம்! மிரட்டப்படும் சாட்சியாளர்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிரான மல்வானை வீடு தொடர்பான வழக்கின் சாட்சியாளரை குறித்த வீடு பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது என கூறுமாறு நிதிக் குற்றப் விசாரணை பிரிவினர் வற்புறுத்தியதாக சாட்சியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவையும் வர்த்தகர் திருக்குமார் நடேசனையும் மார்ச் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கம்பஹா உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச மக்களின் நிதியை தவறாக பயன்படுத்தி மல்வானையில் வீடு ஒன்றினைக் கொள்வனவு செய்ததாகவும் அங்கு பண்ணை நடாத்தி வருவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விளைவாகவே இவ் உத்தவரவை கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர கடந்த மார்ச் 11 ஆம் திகதி வழங்கியிருந்தார்.
இதேவேளை இவ் வழக்கின் சாட்சியாளர் நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியின்படி,
நிதிக் குற்றப் விசாரனை பிரிவினர் தன்னை விசாரணைக்கு அழைத்து அவர்களின் அலுவலகத்தின் மேல் தளத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மல்வானை வீடு பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது என கூறுமாறு நிதி குற்ற விசாரனை பிரிவின் அலுவலர்கள் தன்னை வற்புறுத்தியதாகவும் அப்படி கூறாவிடின் ஜன்னலினுடாக எறிந்துவிடுவார்கள் என அச்சுறுத்தினர்.
ஓர் பத்திரத்தில் தன்னிடம் அவர்கள் கையொப்பம் வேண்டினார்கள் எனவும் அச்சத்தின் நிமித்தம் பத்திரத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை தான் படிக்கவில்லை என்றும் சாட்சியம் வழங்கியுள்ளார்.
சாட்சியின் வாக்குமூலங்களை பரிசீலித்த கம்பஹா உயர்நீதிமன்றம் அடுத்த விசாரணையை மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குறித்த திகதியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் தொழிலதிபர் திருகுமார் நடேசன் ஆகியோரை குறித்த திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.