பேருந்தில் வைத்து பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
பண்டாரவளை (Bandarawela) பிரதான பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்தில் ஒரு பெண் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பண்டாரவளையில் இருந்து பதுளைக்கு புறப்படவிருந்த பேருந்தின் உள்ளே இன்று (09) காலை இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்ல முயன்றபோது பேருந்து சாரதியும் முச்சக்கர வண்டி சாரதியும் அவரைப் பிடித்து ஒரு கம்பத்தில் கட்டி வைத்தனர்.
காவல்துறையினரால் கைது
பின்னர் காவல்துறையினர் வந்து குறித்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குடும்ப தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட பெண் பண்டாரவளை, லியங்கஹவெல பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த பெண் பண்டாரவளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தியதலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது நிலை மோசமாக இருந்ததால், தியதலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா
