மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்
பதுளையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10-05-2026) மஹியங்கனை, அராவத்தை ஓருபெதிவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.
மதுபோதையில் கணவன்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று (10-05-2026) இரவு கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் போது, மதுபோதையில் இருந்த கணவன், தனது மனைவியையும் மகளையும் துப்பாக்கியால் சுடப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அவர் கையில் வைத்திருந்த ஏயார் ரைபிள் (Air Rifle) ரகத் துப்பாக்கியால் மனைவியைச் சுட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன் வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து, குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைபிள் துப்பாக்கியையும் அதற்காகப் பயன்படுத்தப்படும் 77 தோட்டாக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி மஹியங்கனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |