ஒரே நாளில் பல எயார் இந்திய விமான சேவைகள் இரத்து - அவதியில் பயணிகள்
எயார் இந்தியா (Air india) நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த சில நாட்களுக்கு 15 சதவிகித்தில் சேவைகளை குறைக்க இருப்பதாக எயார் இந்தியா நிறுவனம் நேற்று (19) அறிவித்திருந்தது.
அஹமதாபாத் விமான விபத்துக்கு பிறகு எயார் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ரேல் வான்வெளி மூடல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கபடுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
ஏராளமான விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது அல்லது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
விமான சேவைகள்
இந்த நிலையில், இன்று எயார் இந்தியா 8 விமானங்கள் இரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பின்வரும் விமான சேவைகள் இரத்துச் செய்யப்டுகின்றன. ஏ.ஐ906 டுபாய் - சென்னை ஏ.ஐ308 டெல்லி - மெல்போர்ன் ஏ.ஐ309 மெல்போர்ன் - டெல்லி ஏ.ஐ2204
மற்றும் டுபாய் - ஐதராபாத் ஏ.ஐ874 பூனே - டெல்லி ஏ.ஐ456 அஹமதாபாத் - டெல்லி ஏ.ஐ2872 ஐதராபாத் - மும்பை ஏ.ஐ571 சென்னை – மும்பை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
