திருகோணமலையில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்! நாடாளுமன்றத்தை அதிரச் செய்த எதிர்க்கட்சியினர் - காணொளி
திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் சிக்கி மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனரை் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroof) நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.
திருகோணமலையில் இன்றைய தினம் இழுவைப்படகு விபத்திற்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிஞ்சாக்கேணி பாலம் சம்பந்தமாக கேள்வியொன்றை நான் எழுப்பிய சந்தர்ப்பத்தில் இதுவொரு நக்கலான விடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய அனர்த்தத்திற்கு காரணமான பாதை எந்த அனுமதியுடன் இயங்குகிறது? இது சட்டப்படி இயங்குகிறதா? சட்டவிரோதமாக இயங்குகிறதா என அரசாங்க தரப்பினை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விபத்து குறித்து சபையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
அரசாங்கத்தின் அசட்டை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாக ஹக்கீம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சபையில் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.