யாழில் இலட்சக்கணக்கான பணம் இலாபம் ஈட்டும் தொழில்: விண்ணப்பிக்க முந்தியடிக்கும் மக்கள்
கிராஞ்சியில் அமைந்துள்ள கடலட்டை பண்ணைக்காக பலரும் விண்ணப்பித்துள்ளனர், ஆகவே பாரம்பரியமாக கடற்தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமது தவறை உணர்ந்து கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான பணம் இலாபமாக கிடைத்துள்ளது, மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
எமது வளங்கள் சூறையாடப்படுகின்றன
இதனால் பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, இதனால் எமது வளங்கள் பாதிக்கப்படுவது மாத்திரமல்லாமல் எமது வளங்களும் சூறையாடப்படுகின்றன.
அதேபோல் எமது பகுதி மீனவர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே தான் கூறுகிறார் என அவர் தெரிவித்தார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்