அரச செலவீனங்கள் குறித்து நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் நீடிக்கும் நிலையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து, அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும், தற்போதைய அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட அரச செலவு எல்லைகளுக்குள் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்காகவும் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவினால் இந்தச் சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், விசேட செலவின அலகுகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள்/சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச அலுவலகங்களுக்கு விடுமுறை
இந்தச் சுற்றறிக்கையில், தற்போது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் புதன்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொடுப்பனவானது, மறு அறிவித்தல் வரை கடந்த மார்ச் மாதம் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதிலாக, எரிபொருள் அளவு மற்றும் விலையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகளையும் கடந்த மார்ச் 01ஆம் திகதி விலையின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அரச நிதி நிலைத்தன்மையை பேணுவதற்காகவும், அனுமதிக்கப்பட்ட செலவு வரம்புகளுக்குள் அரச இயந்திரத்தை இயங்குவதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்