பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஏககாலத்தில் நடத்தி வரும் மூன்று இராணுவ நடவடிக்கைகளான ஒப்ரேசன் எபிக் பியூரி, ஒப்ரேசன் ஷீல்ட் ஒஃப் யூதா மற்றும் ஒப்ரேசன் ரோரிங் லயன் ஆகியவற்றின் கலவைகளும் ஈரானின் பதிலடிகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று இரண்டாம் நாள் போர்முகத்தை வெளிப்படுத்தின.
ஈரான் தனது அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனியுடன் சேர்ந்து படைத்துறையின் முக்கிய முகங்களை இழந்துள்ளமை அதற்குப் பெரும் அடியாக மாறியுள்ளது.
நேற்றைய தாக்குதலில் ஈரானிய புரட்சிகர படையின் முதன்மை தளபதியான மேஜர் ஜெனரல் பாக்பூர், முப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்தோல் ரஹிம் மௌசவி, பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாதே மற்றும் ஈரானிய பாதுகாப்புப் பேரவை அட்மிரல் அலி ஷம்கானி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கிட்டிய துல்லியமான ஒரு உளவுத் தகவல் ஈரானுக்கு இந்தப் பேரடியை வழங்கியது.
தலைவர் கமேனி உட்பட மூத்த ஈரானிய படைத்தலைவர்கள் நேற்று ஒரே இடத்தில் சந்திக்க உள்ளதாகக் கிடைத்த உளவுத் தகவலால் இந்த வாய்ப்பைத் தவறவிடத் தயாராக இல்லாத இஸ்ரேல் நேற்று இந்த அதிரடியை அவசரமாக நடத்த அமெரிக்கா அதன் பின்னர் தாக்குதலைத் தொடர்ந்ததாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல்களில் கமேனி மட்டுமல்லாது அவரது மகள், பேத்தி, மருமகள் மற்றும் மருமகன் எனப் பலரும் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், 86 வயது முதியவரான கமேனியின் உடல் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டதை அடுத்து இன்று காலை ஈரானிய தேசிய தொலைக்காட்சி இந்த மரணத்தை உறுதிப்படுத்தியது.
கமேனியின் மரணம் தற்போது ஈரானிய வரலாற்றில் மட்டுமல்லாது மத்திய கிழக்கின் வரலாற்றுத் தடத்திலும் ஒரு பெரும் அரசியல் அதிர்வாக மாறியுள்ளது.
ஆனால், இன்று இரண்டாவது நாளாகவும் தாக்குதல்கள், எதிர்த்தாக்குதல்கள், சூளுரைகள் மற்றும் பதில் சூளுரைகள் என வளைகுடா பெரும் அதிர்வுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த விடயங்களைத் தாங்கி வருகிறது செய்திவீச்சு….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |