கனடாவில் நிதி மோசடியில் சிக்கி பரிபோன மில்லியன் டொலர்கள்
கனடாவில் (Canada) நிதி மோசடி சம்பவங்களில் சிக்கி சுமார் 638 மில்லியன் டொலர்கள் இழக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் கனேடியர்கள் இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கனடிய மோசடி தவிர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி மோசடிகள்
இந்தநிலையில், நிதி மோசடிகள் கடந்த பத்து ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, செயற்கை நுண்ணறிவு மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர் கார்மி லெவி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தகவல்
நிதி சேவைத்துறையில் இது “பெரும் நெருக்கடி” நிலையை உருவாக்கி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
வங்கிப் பணியாளர் அல்லது நிறுவன பிரதிநிதி என தெரிவித்து பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை பறிக்கும் இந்த மோசடிகளில் பலர் இலக்காகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

