காணாமல் போன யாழ். கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் மீட்பு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (27) மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதவிய இந்திய கடற்றொழிலாளர்கள்
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு கடற்றொழிலாளர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது.

இதனை அவதானித்த இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று கடற்றொழிலாளர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டுச் சென்றனர்.
பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில் இன்றைய தினம் ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |