அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Sri Lanka Police Colombo Parliament of Sri Lanka Ramanathan Archchuna
By Raghav Jan 22, 2025 11:04 AM GMT
Report

புதிய இணைப்பு

சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி ஒரு பிரேரணையை முன்வைத்திருந்ததோடு, தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ​​அனுராதபுரம் காவல்துறை சந்தேக நபரை "அர்ஜுன லோச்சன்" என்று பெயரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி, சரியான சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கும்பல் - வலைவீசும் காவல்துறை

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கும்பல் - வலைவீசும் காவல்துறை

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கல்வல பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.

வீதி விதிகளை மீறி காரைச் செலுத்தியமைக்காக காவல்துறையினர் அர்ச்சுனாவின் காரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

நகர்த்தல் பத்திரம்

இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Mp Archuna Gets Into Trouble With The Police

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை இன்றைய தினம் தாக்கல் செய்து குறித்த வழக்கை இன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, பிற்பகல் 1.30க்கு வழக்கை விசாரிக்க அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் குழுவுக்கும் இடையில்  நடந்த கருத்து மோதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறித்த சம்பவம் அனுராதபுரத்தின் (Anuradhapura) ரம்பேவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்றைய (21.01.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது சொந்த வாகனத்தில் கொழும்பு (Colombo) நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்புகள் : உலகின் கவனத்தை ஈர்க்கும் ட்ரம்ப்

முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்புகள் : உலகின் கவனத்தை ஈர்க்கும் ட்ரம்ப்

தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

இதன்போது, விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டியதற்காக நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Mp Archuna Gets Into Trouble With The Police

அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரினர்.

"நான் நாடாளுமன்றத்திற்குப் போகிறேன்." என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த பின்னரும் காவல்துறை அதிகாரிகள் அவருடைய ஆவணங்களை தொடர்ச்சியாக கோரியதுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார

சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025