இளம் எம்.பியின் திடீர் மறைவு : அமைச்சர் இரங்கல்
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் (H. A. Kosala Nuwan Jayaveera) திடீர் மறைவுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோசல நுவன் ஜயவீரவின் ஜயவீரவின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கின்றது.
அத்தோடு, வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைவதற்கு துடிப்புடன் செயற்பட்டவர்.
சொந்தங்களின் பிரச்சினைகள்
ஒரு துடிப்புள்ள இளம் தலைவரின் மரணம் மனதை சுக்குநூறாக்குகின்றது, ஒரு செழிப்பான நாட்டுக்காக அவர் துடிப்புடன் செயற்பட்டார்.
எம்முடன் கருத்துகளை பரிமாற்றிக்கொள்வார், சிறந்த தூரநோக்கு திட்டங்கள் அவரிடம் இருந்தன.
கேகாலை மாவட்டத்தில் வாழும் எமது மலையக சொந்தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அடிக்கடி என்னுடன் கலந்துரையாடுவார்.
தோழரின் மறைவு
பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வருவார், இப்படியான உன்னதமான தோழரின் மறைவு பேரிழப்பாகும்.
அவரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவரது ஆத்மா இறைப்பாறட்டும், எதற்காக அவர் அரசியல் களம் வந்தாரோ அந்த நோக்கத்தை சக தோழர்களாக நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
