இலங்கைக்கு வருகை தந்த வெளிநாடொன்றின் பிரபல கப்பல்!
ஜேர்மனிய சுற்றுலா நிறுவனத்தினால் இயக்கப்படும் MS Amadea எனும் சொகுசு சுற்றுலா கப்பல், தனது உலகப் பயணத்தின் ஒரு அங்கமாக இன்று 900 சுற்றுலாப் பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலில் 580 பயணிகள் மற்றும் 315 பணியாளர்கள் என மொத்தம் 895 பேர் பயணம் செய்துள்ளனர்.
193 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் எட்டு அடுக்குகளைக் கொண்டதுடன், அதன் அனைத்து அறைகளும் தனிப்பட்ட பால்கனிகளைக் கொண்ட வெளிப்புற அறைகளாக இருப்பது கப்பலின் தனிச்சிறப்பு என கூறப்படுகிறது.
கடல் கொந்தளிப்பு
2025 டிசம்பரில் ஜேர்மனியில் ஆரம்பமான 146 நாட்கள் கொண்ட உலகளாவிய பயணத்தின் ஒரு பகுதியாகவே இக்கப்பல் இலங்கை வந்தடைந்தது.

Image Credit: Crew Center
இலங்கையில் காலி கோட்டை, ஹிக்கடுவை, ரூமஸ்ஸல, கொக்கல மற்றும் அஹங்கமை ஆகிய இடங்களுக்கு பயணிகள் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
முதலில் காலி துறைமுகத்திற்கு வந்தடைந்த போதிலும், அங்கு நிலவிய கடல் கொந்தளிப்பு காரணமாக சிறிய படகுகள் மூலம் பயணிகளை கரைக்கு அழைத்துச் செல்வதில் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
படப்பிடிப்புகள்
இதன் காரணமாக காலி பயணத்தை ரத்து செய்த கப்பல், மாற்றுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்துள்ளதாக தெரியவருகிறது.

ஜேர்மனியில் மிகவும் பிரபலமான "Das Traumschiff" (The Dream Ship) என்ற தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்புகள் இக்கப்பலிலேயே நடைபெறுகின்றன. இதனால் ஜேர்மனிய மக்களிடையே இக்கப்பல் மிகவும் பிரபல்யமான ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |