நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Oct 01, 2023 08:55 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காரணத்தினாலேயே தமது மதிப்பு வாய்ந்த நீதவான் பதவியை விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, “ நீதவான் குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக விகாரை கட்டுமானம் இடம்பெறுவது பற்றிய தள ஆய்வுக்கவாகவே நீதிமன்ற அலுவலர்கள் சகிதம் அங்கு சென்றுள்ளார்.

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: விரைவில் ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ள அறிக்கை

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: விரைவில் ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ள அறிக்கை


நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்

ஆய்வுப்பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொழுதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா எதுவித அறிவித்தலோ, அழைப்போ, அனுமதியோ இல்லாமல் தமது பரிவாரங்களுடன் அங்கு பிரசன்னமாகியது மட்டுமன்றி நீதவானின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் அவருடன் வாதிட முயற்சி செய்கிறார்.

நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு | Mullai Teevu Judge Resignment Issue

இது நீதிமன்றத்தையும் நீதவானையும் அவமதிக்கும் செயலாகும். அதனை நீதவான் நிராகரித்த காரணத்தால் சரத் வீரசேகர ஆத்திரப்பட்ட நிலையிலேயே காணப்பட்டார்.

நீதிமன்ற செயற்பாடுகளில் வேற்று எவரும் தலையீடு செய்வது நீதிமன்ற நடைமுறைகளுக்கு மாறானது என்று தெரிந்து கொண்டே சரத் வீரசேகரா இவ்வாறு அடாவடித்தனமாக செயற்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் விகாரை : ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது நீதிமன்றம்

தமிழர் பகுதியில் விகாரை : ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது நீதிமன்றம்


உயிர் அச்சுறுத்தல்

இதன் போதே தமது ஆத்திரத்தை இவர் அங்கு வெளிப்படுத்தியது ஊடகங்கள் வெளிப்படுத்திய செய்தி. நாடாளுமன்ற அனுபவம் உள்ளவரும், பாதுகாப்புத் துறைசார் குழுவின் தலைவராக உள்ளவருமான சரத் வீரசேகரவின் அன்றைய செயற்பாடுகளே சரவணரராஜாவுக்கு தீவிர உயிர் அச்சுறுத்தலை தோற்றுவிப்பது இயல்பானதே. இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் இணைந்து இனவாதத்தைக் காட்டியிருந்தார்.

நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு | Mullai Teevu Judge Resignment Issue

இதற்கு மேலாக, நாடாளுமன்ற சிறப்புரிமையை கவசமாகப் பாவித்து சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் சரவணராஜாவுக்கு எதிராக ஆற்றிய உரை அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவது உறுதிப்படுத்தியிருக்கக்கூடியது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் படி செயற்பட்ட நீதிவானைப் பாதுகாக்க வேண்டிய நீதியமைச்சரும் சபாநாயகரும் பொருத்தமான நடவடிக்கை எதனையும் எடுக்கவுமில்லை.

சிங்கள ஏகாதியத்தியம்

சபாநாயகர் ஒப்புக்கு ஒரு ஆலோசனையைத் தெரிவித்து விடயத்தை முடித்துக் கொண்டார். நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த வழிபாட்டு நிலையத்தை குருந்தூர்மலை பிக்கு மேற்கொண்ட நிர்மாண வேலைகள், அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் புத்தசாசன அமைச்சரின் வருகை, அவரது தனிப்பட்ட குடும்ப விடயங்களை விமர்சனம் செய்தமை எல்லாமே சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கும் என்பதை உணராதது மட்டுமன்றி, இவற்றை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலம் இந்த நாட்டில் நீதி நிர்வாகம் இனவாதத்திற்குள்ளும் பௌத்த மதவாதத்திற்குள்ளும் சிக்கியுள்ளமை வெளிப்படையான விடயமாகும்.

நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு | Mullai Teevu Judge Resignment Issue

ஒரு நீதவானை அந்தப் பதவி சார்ந்து பார்க்காமல் தமிழன் என்று பார்த்து விமர்ச்சித்தையும் இரசித்துக் கொண்டது முழு அரசாங்கமும். வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் இது. இந்த இலட்சணத்தில்தான் உள்ளகப் பொறிமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும் சிங்கள ஏகாதியத்தியம் பேசிக்கொண்டிருக்கிறது.

எனவே சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சரத் வீரசேகர போன்றோரின் செயற்பாடுகள் பற்றி பூரணமாக விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

அதேநேரம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கப்பெறும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களுக்கு அமைய பன்னாட்டு பங்களிப்புடன் கூடிய விசாரணைகள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இங்குள்ள அனைத்து இராஜதந்திரிகளும் மானுட தர்மத்துடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்றுள்ளது. 

கொலை மிரட்டலால் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த நீதிபதி சரவணராஜா: கிளிநொச்சியில் போராட்டம் (படங்கள்)

கொலை மிரட்டலால் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த நீதிபதி சரவணராஜா: கிளிநொச்சியில் போராட்டம் (படங்கள்)

 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019