தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசு கட்சியினால் இன்று (12) இலங்கை தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மே 12 முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ளதையொட்டி இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பட்டினி மற்றும் துயர நிலைகளில் வாழ்ந்த மக்களை நினைவுகூரும் முகமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆண்டுதோறும் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுடன் பகிர்ந்து உண்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்தநிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு சிரட்டைகளில் கஞ்சி பெற்று அருந்தியதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பிரதேச உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மக்களுக்கு கஞ்சி வழங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

