முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்கள் கைது: வலுக்கும் கண்டனங்கள்!

Sri Lanka Police Trincomalee Mullivaikal Remembrance Day
By Eunice Ruth May 13, 2024 04:13 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12), முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக இன்று (13) கண்டனம் வெளியிட்டுள்ளது. 

இவ்வாறான கைது நடவடிக்கைகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், நல்லிணக்கம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் உள்ள போலித்தன்மை புலப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கைது நடவடிக்கை

திருகோணமலை (Trincomalee) - சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

mullivaikkal kanji arrest trincomalee

டொனால்ட் லூவின் இலங்கை பயணம்: முன்னெடுக்கப்பட்ட முக்கிய சந்திப்புக்கள்!

டொனால்ட் லூவின் இலங்கை பயணம்: முன்னெடுக்கப்பட்ட முக்கிய சந்திப்புக்கள்!

சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் கஞ்சி 

அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “15 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது. 

இரட்டை குடியுரிமை சர்ச்சை: விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை!

இரட்டை குடியுரிமை சர்ச்சை: விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை!

இலங்கையில் (Sri Lanka) நல்லிணக்கம் தொடர்பான பேச்சுக்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. எனினும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளும் கைது நடவடிக்கைகளும் இன்றும் தொடர்கின்றன. 

தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுக்கும் போது காவல்துறையினர் தொடர்ந்தும் அடக்குமுறைகளை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.  

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள இராணுவத்தினர் வெசக் பண்டிகைக்கான பானங்களையும் உணவுகளையும் குறித்த பகுதியில் விநியோகித்திருந்தனர். சிறிலங்கா காவல்துறையினரின் பாசாங்குத்தனம் தற்போது நன்கு வெளிப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021