பாடசாலை நிர்வாகத்திடம் முழுமையாக கையளிக்கப்பட்ட இராணுவ கட்டுப்பாட்டு பகுதி
முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதி தற்போது முழுமையாக முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்னமிஸன் பாடசாலைக்கு உரியமுறையில் கைளிக்கப்பட்டுள்ளது.
முறக்கொட்டான்சேனை படைமுகாம் அகற்றப்பட்டு 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பகுதியை மீளளிக்கும் நிகழ்வு இன்று (30.09.2025) வளாகத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.
1989 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினர் முகாமிட்டதன் பின்னர் அவர்களால் இலங்கை இராணுவத்தினருக்கு இப்பிரதேசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
சுனில் ஹந்துன்னெத்தி
அங்கு இராணுவத்தினர் தமது நடவடிக்ககைளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,
“இப்பாடசாலையை உடனடியாக ஆரம்பிக்ககூடிய நிலையில் இராணுவத்தினர் கையளித்தமைக்கு நன்றிகள். மற்றும் பொதுமக்களின் தேவைக்காக காணப்படும் காணிகளை நீதி துறையின் அணுகலின் அடிப்படையில் அவற்றையும் விடுவித்து வரப்படுகின்றன.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்த வந்த முறக்கொட்டான் சேனை இராமகிருஷ்னா பாடசாலை வளாகத்தில் இயங்கிய குறித்த இராணுவ முகாமானது தற்போது முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி பாடசாலை நிருவாகத்திடமும் மக்களிடமும் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
